Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th April 2024 14:53:09 Hours

5 வது (தொ) இலங்கை பீரங்கி படையணி படையினரால் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு

5 வது (தொ) இலங்கை பீரங்கி படையணி படையினர் தல்கஸ்வெவவில் தகுதியான குடும்பம் ஒன்றிற்கு அண்மையில் புதிய வீடொன்றை நிர்மாணித்துள்ளனர். 09 ஏப்ரல் 2024 அன்று வீடு அதிகாரப்பூர்வமாக பயனாளிக்கு ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி கலந்துகொண்டார். இத்திட்டத்திற்கு அனுசரணை வழங்கிய திரு.யூ அனுராத கொத்தலாவல அவர்கள் வீட்டு சாவியை குடும்பத்தாரிடம் கையளித்தார். மேலும், விழாவின் போது, கிராமத்தில் உள்ள மற்ற 20 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை நன்கொடையாளர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், அரச அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.