28th August 2023 22:09:45 Hours
5 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் 36 வது ஆண்டு நிறைவு விழா இராணுவ சம்பிரதாயம் மற்றும் மத அனுஷ்டானங்களுடன் ஓகஸ்ட் 15 கொண்டாடப்பட்டது.
இந்த கொண்டாட்டத்தில் விளையாட்டு, படையினர்களுக்கு ஆசீர்வாதம் வழங்குவதற்காக இரவு முழுவதும் ‘பிரித்’ பாராயணம், படையினருக்கு மதிய உணவு மற்றும் மாலை இசை நிகழ்வும் இடம் பெற்றது.
5 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி 1987 ஓகஸ்ட் 15 ம் திகதி கண்டி, பல்லேகலேயில் நிறுவப்பட்டது. மூன்று தசாப்த கால யுத்தத்தின் போது 5 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர்கள் எல்ரீரீஈ பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக இல்லாதொழிப்பதில் தீவிரமாக பங்களிப்பு வழங்கினர்.