06th June 2023 17:19:50 Hours
பொசன் பௌர்ணமி தினத்திற்கு இணையாக வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 65 வது காலாட் படைபிரிவின் 653 வது காலாட் பிரிகேட்டின் 4 வது கஜபா படையணியின் படையினர் பொசன் தினமான ஜூன் 3 அன்று மடு பிரதேசத்தில் அன்னதானம் வழங்கினர். 65 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 653 காலாட் பிரிகேட் தளபதி அவர்களின் வழிகாட்டுதல்களுக்கமைய இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
4 வது கஜபா படையணியின் அனைத்து அதிகாரிகளும் சிப்பாய்களும் 'அன்னதானத்திற்கு பங்களித்ததுடன் அப்பகுதியின் அனுசரனையாளர்கள் இந்த திட்டத்திற்கு தங்கள் ஆதரவை வழங்கியிருந்தனர்.
அனைத்து இனத்தைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.