14th August 2023 19:10:46 Hours
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 52 வது காலாட் படைப்பிரிவின் 521 வது காலாட் பிரிகேடின் 4 வது இலங்கை சிங்கப் படையணி படையினர், பாடசாலை அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில் யாழ். கரணவாய் (மேற்கு) தாமோதர பாடசாலையின் மாணவர்களுடன் இணைந்து புதன்கிழமை (ஓகஸ்ட் 09) பாடசாலை வளாகத்தை சுத்தம் செய்தனர்.
இப்பிரதேசத்தில் வேகமாகப் பரவும் டெங்கு நுளம்பு அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. 521 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் 4 வது இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோர் படையினரை மேற்பார்வையிட்டதுடன், இந்த சமூக திட்டத்திற்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினர்.