19th November 2023 21:20:04 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11 வது காலாட்படை பிரிவின் 111 வது காலாட் பிரிகேடின் 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினர் நவம்பர் 18 ஆம் திகதி 40 வது மைல் கல்லில் லக்கல - மொரகஹகந்த பிரதான வீதியில் பாதகமான வானிலை நிலைமைகளைத் தொடர்ந்து போக்குவரத்துக்கு தடையாக இருந்த பாரிய மரமொன்றை உடனடியாக அகற்றினர்.
11 வது காலாட் படைபிரிவின் தளபதி வழங்கிய வழிகாட்டுதலின் பேரில் 111 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினர் அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகளுக்கு குறுகிய காலத்திற்குள் அதை துண்டுகளாக வெட்டுவதன் மூலம் மரத்தை அகற்றுவதற்காக தங்கள் மனிதவள உதவியை வழங்கினர்.
போலீசாரின் உதவியுடன் சில மணி நேரத்தில் போக்குவரத்து சீரானது.