Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th November 2022 18:40:43 Hours

3 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் படையினர் துணிச்சலான மீட்பு நடவடிக்கையில் உயிர் காப்பாற்றப்பட்டது

மாத்தறை நில்வலா ஆற்றுக்கு அருகில் அமைந்துள்ள மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 61 வது காலாட் படைப்பிரிவின் 613 வது காலாட் பிரிகேடின் 3 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் படையினர் துணிச்சலான மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு 19 நவம்பர் 2022 அன்று இரவு 8.00 மணியளவில் மாத்தறை மஹாநாம பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த 74 வயது முதியவரின் உயிரைக் காப்பாற்றினர்.

3 வது (தொ) கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரியின் வழிகாட்டுதலின் பேரில், அருகிலுள்ள பணியிடத்தில் நின்றிருந்த அந்த படையினர் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் இறங்கினர், மேலும் ஒரு படகில் இருந்த படையினர் ஓடும் நீரில் கொண்டு செல்லப்பட்ட 74 வயதான நபரை உடனடியாகக் கண்டறிந்து அவரைக் காப்பாற்ற முடிந்தது.

அவர் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.