Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th July 2023 21:02:00 Hours

3 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் ஆண்டு நிறைவு விழாவில் மாணவர்களுக்கு உபசரிப்பு

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 12 வது காலாட் படைப்பிரிவின் 122 வது காலாட் பிரிகேடின் 3 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் 33 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (7) திஸ்ஸமஹாராம காவந்திஸ்ஸபுர மகா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி ஆண்டு நிறைவை முன்னிட்டு நன்கொடையாளர் திருமதி கங்கா குமாரி பத்மசிறி அவர்களின் அனுசரணையுடன் திஸ்ஸமஹாராம காவந்திஸ்ஸபுர மகா வித்தியாலயத்தின் 350 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீபீஏ பெரேரா எச்டிஎம்சீ பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.