23rd September 2023 19:46:11 Hours
கடற்கரைகளை சுத்தமாக வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் நோக்கில், 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ சந்திரசிறி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் வழங்கிய வழிகாட்டுதலின்படி 'பொத்துவில் முஹுது மஹா விஹாரய' சுற்றுப்புறத்தை சுற்றியுள்ள கடற்கரையை வெள்ளிக்கிழமை (15) 24 வது காலாட் படைப்பிரிவின் 242 வது காலாட் பிரிகேட் படையினர் சுத்தம் செய்தனர்.
241 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் எல்எஸ்டிஎன் பத்திரத்ன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்களின் அறிவுறுத்தலின் கீழ் 242 வது காலாட் பிரிகேடின் சிவில் விவகார அதிகாரி லெப்டினன் கேணல் டபிள்யூஆர் தர்மசேன அவர்களின் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்பில் இத் திட்டம் நடைபெற்றது.
14 வது இலங்கை சிங்கப் படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இத் திட்டத்தில் கலந்து கொண்டனர்.
15 இராணுவத்தினர் மற்றும் பொத்துவில் மாநகர சபை உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவினரால் அறுகம்பை வரையான கடற்கரையில் மாசுக்களை அகற்றி சுத்தம் செய்தனர்.