18th November 2023 00:20:17 Hours
அம்பாறை சம்மாந்துறை மஜீத்புரம் கிராமத்தில் ஆதரவற்ற குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் 24 வது காலாட் படைப்பிரிவின் ஒருங்கிணைப்பில், 65 பொது மக்களுக்கு தலா ரூ. 3500/= பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் 2023 நவம்பர் 12 அன்று அம்பாறை 24 வது காலாட் படையணி தலைமையகத்தில் வழங்கப்பட்டது.
மனிதநேய அமைப்பின் தலைவி திருமதி ரஸார்த் நவ்ஷார் மற்றும் அட்டாளைச்சேனையின் சமூகப் பணி இணைப்பாளர் திரு எஸ்.எல்.எம். நஸ்ரூத் ஆகியோர் இப்பணிக்கு நன்கொடை வழங்கினர்.
24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ சந்திரசிறி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த விநியோக நிகழ்வில்,சம்மாந்துறை மஜீத்புரத்தில் உள்ள கிராமசேவையார்கள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ சந்திரசிறி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ, 24 வது காலாட் படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள், இராணுவ ஊடக ஆலோசகர் திரு. சிசிரவிஜேசிங்க, மனித நேய இணைப்பின் தலைவி திருமதி ரஸார்த் நவ்ஷார் மற்றும் அட்டாளைச்சேனையின் சமூகப் பணி இணைப்பாளர் திரு எஸ்.எல்.எம். நஸ்ரூத் ஆகியோர் அந்த நிவாரணப் பொதிகளை பயனாளிகளுக்கு விநியோகித்தனர்.