21st March 2019 09:00:23 Hours
படையினர்களுக்கு 'சட்ட விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைபற்றிய துறையின் அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன்அம்பாறை, மல்வத்த பிரதேசத்தில் அமைந்துள்ள 24 ஆவதுபடைப் பிரவில் இம் மாதம் (13) ஆம் திகதி செயலமர்வு இடம்பெற்றது.
இந்த செயலமர்வில் வழக்காளியான திருமதி மேதா த அல்விஸ் அவர்கள் உறைகள் மூலம் தமது விளக்கத்தை வெளிக்காட்டினார்.
சட்டபூர்வ நலன்கள், இராணுவ முகாமைத்துவம், குடும்ப பிரச்சினைகள் தொடர்பான சட்டங்கள் மற்றும் அதன் வரம்புகள், பத்திரங்கள் மற்றும் அதன் உட்குறிப்பு ஆகியவற்றைப் பெறுவதற்கான நடைமுறைகள் தொடர்பான விரிவுரைகளை இராணுவத்தினருக்கு இவர் நிகழ்த்தினார்.
இதன்போது படையினர்கள் தங்களுக்கு இடையில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் மற்றும் சந்தேகங்கள் தொடர்பாக இவருடன் இந்த செயலமர்வின் ஊடாக கலந்துரையாடலையும் மேற்கொண்டனர்.
இந்த செயலமர்வில் இராணுவ அதிகாரிகள் உட்பட மொத்தமாக 150 படையினர் கலந்து கொண்டனர். மேலும் 24 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்களும் இந்த செயலமர்வில் இணைந்துகொண்டார். affiliate link trace | Nike