12th August 2023 18:06:19 Hours
23 வது காலாட் படைப்பிரிவின் வழிகாட்டலின் 233 வது காலாட் பிரிகேடினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி மற்றும் விசேட மதிய உணவு விருந்து 01 ஓகஸ்ட் 2023 அன்று கதிரவெளி திலகவதியார் சிறுவர் இல்லத்தின் சிறுவர்களுக்காக சல்லித்தீவு கடற்கரையில் இடம்பெற்றது.
233 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் ஏ.கே.சி.எஸ் டி சில்வா ஆர்எஸ்பீ அவர்கள் அவரது படையினர் மற்றும் நன்கொடையாளர்களுடன் அவர்களின் சமூகம் சார்ந்த திட்டங்களின் ஒரு பகுதியாக ஏற்பாட்டிற்கு அனுசரணை வழங்கினர்.
பிள்ளைகளின் மன அழுத்தத்தைக் குறைத்து அவர்களை மகிழ்ச்சியடையச் செய்யும் நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியின் போது அந்த 29 பிள்ளைககள் மற்றும் பணியாளர்கள் முறையே பாடசாலைப் பொருட்களையும் ஆடைகளையும் பெற்றனர்.
233 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் ஏ.கே.சி.எஸ் டி சில்வா ஆர்எஸ்பீ, 233 வது காலாட் பிரிகேட் சிவில் விவகார அதிகாரி, நன்கொடையாளர்கள் மற்றும் படையினர் ஆகியோர் இச்செயற்திட்டத்தில் கலந்து கொண்டு நிகழ்வை வெற்றியடையச் செய்தனர்.