08th October 2022 20:05:33 Hours
இலங்கை இராணுவத்தின் 73 ஆம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு, 23 வது படைப்பிரிவின் 231 வது பிரிகேடின் 11 வது (தொ) இலங்கை சிங்க படையணியின் படையினரால் அனுசரணையாளரான, திரு தனோஜ் பியகம மற்றும் 'அபி மனுசயோ' சங்கத்தின் உறுப்பினர்களின் அனுசரணையுடன் தலா ரூ.5000.00 பெறுமதியான 75 உலர் உணவு பொதிகளை திங்கட்கிழமை (3) கெமுனுபுர கிராம சேவை பிரிவில் மங்களகம, கெவிலியமடு மற்றும் தந்தமலை பிரதேசங்களில் வசிக்கும் வறிய குடும்பங்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டது.
மேலும், அப்பகுதியின் 31 கர்ப்பிணிப் பெண்களுக்கும், மங்களகம ஸ்ரீ தர்மராம விகாரையில் தலா 10,000 ரூபாய் பெறுமதியான பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டன.
231 ஆவது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் திலுப பண்டார அவர்களின் பணிப்புரையின் பேரில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. சமூக சேவையாளர்களான திருமதி சசிகலா குணரத்ன மற்றும் திருமதி மதரா ரணவீர ஆகியோர் முழு திட்டத்தையும் ஒருங்கிணைத்தனர்.
231 வது பிரிகேட் சிவில் அலுவல்கள் அதிகாரி லெப்டினன்ட் கேணல் தம்மிக்க வீரசிங்க, 11 வது (தொ) சிங்கப்படையணி கட்டளை அதிகாரி மேஜர் அசேல யாப்பா, படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இந்த விநியோக நிகழ்வில் கலந்துகொண்டனர்.