05th December 2022 22:00:12 Hours
மட்டக்களப்பு கல்லடியில் உள்ள 231 வது காலாட் பிரிகேட் தலைமையகத்தின் முயற்சியின் பேரில், கொழும்பு நன்கொடையாளர் திருமதி மிஹிரி டி சில்வா அவர்கள் 'ஓசனம்' சிறுவர் இல்லத்தில் வசிக்கும் விசேட தேவையுடைய சிறார்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சுவையான மதிய உணவுப் பொதிகளை வியாழக்கிழமை (1) வழங்கினார்.
231 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் திலுப பண்டார அவர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் வழிகாட்டுதலின் கீழ் நன்கொடையாளருடன் இணைந்து இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. விசேட தேவையுடைய சகல சிறார்களுக்கும் பரிசுப் பொதிகள் விநியோகிக்கப்பட்ட பின்னர், 231 வது காலாட் பிரிகேடினர் சமூக நலன் சார்ந்த செயற்திட்டங்களின் ஒரு பகுதியாக அப்படையினர் அவர்கள் அனைவருக்கும் ஆடம்பரமான மதிய உணவை வழங்கினர்.
நன்கொடையாளரின் பிரதிநிதிகள், பிரிகேட் தளபதி, சிவில் விவகார அதிகாரி, அதிகாரிகள் மற்றும் 231 வது காலாட் பிரிகேடின் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.