10th June 2023 17:48:34 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஏ குலதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களுக்கு திங்கட்கிழமை (ஜூன் 05) 23 வது காலாட் படைப்பிரிவின் தலைமையக வளாகத்தில் பிரியாவிடை வழங்கப்பட்டது.
வெளியேறும் தளபதிக்கு 6 வது கஜபா படையணி படையினரால் நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
மேலும் அன்றைய நினைவுகளைச் சேர்க்கும் வகையில், குழுப்படம் எடுக்கும் நிகழ்விலும் கலந்து கொண்டார். அதன் பின்னர் தளபதி படையினருக்கு உரையாற்றுகையில் தனது பதவிக்காலத்தில் வழங்கிய ஆதரவிற்காக அனைத்து தரப்புகளுக்கும் நன்றி தெரிவித்தார்.பின்னர், வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டு படையினருடன் கலந்துரையாடினார்.
மறுநாள், 23 வது காலாட் படைப்பிரிவின் படையினர், அவரது எதிர்காலத்திற்காக அவரை வாழ்த்துவதற்காக வீதி பிரியா விடை மரியாதை வழங்கினர். சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.