07th April 2024 13:47:37 Hours
23 வது காலாட் படைப்பிரிவினால் 2024 ஏப்ரல் 04 அன்று பிரமாண்ட பிரியவிடை நிகழ்வில் வெளியேறும் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயூபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி ஐஜீ அவர்கள் கௌரவிக்கப்பட்டார்.
கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதிக்கு முதலில் நுழைவாயிலில் வாகன தொடரணி மரியாதை வழங்கப்பட்டது. இராணுவ மரபுகளைப் பின்பற்றி, அவர் ஒரு குழு படத்தினை பெற்றுக்கொண்டதுடன் 23 வது காலாட் படைப்பிரிவு வளாகத்தில் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களையும் பதிவிட்டார். இது அவரது பதவிக்காலத்தின் நேசத்துக்குரிய நினைவுகளை குறிக்கிறது.
மேஜர் ஜெனரல் எம்கேயூபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி ஐஜீ அவர்கள் 23 வது காலாட் படைப்பிரிவின் படையினருக்கான உரையில் தனது பதவிக்காலத்தில் வெளிப்படுத்திய சிறந்த நடத்தை மற்றும் ஒத்துழைப்புக்காக 23 வது காலாட் படைப்பிரிவின் அனைத்து நிலையினருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையிலும் அவரது தலைமைத்துவத்தை நினைவு கூறும் வகையிலும் அவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இராணுவத்தினருக்குள் தோழமை மற்றும் ஒற்றுமையை அடையாளப்படுத்தும் பாரம்பரியமான அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபாரத்திலும் தளபதி கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் 231, 232 வது மற்றும் 233 வது காலாட் பிரிகேட் தளபதிகள் மற்றும் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பணிநிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் 23 வது காலாட் படைப்பிரிவின் பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு வெளியேறும் தளபதிக்கு மரியாதை செலுத்தினர்.