29th December 2023 20:50:04 Hours
கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 22 வது காலாட் படைப்பிரிவின் 222 வது காலாட் பிரிகேட்டின் 5 (தொ) இலங்கை பீரங்கிப் படையணியின் படையினர் அக்போபுரவில் வசிக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதிகளை அக்போபுர ஆரம்ப மருத்துவப் பிரிவுக்கு சனிக்கிழமை (டிசம்பர் 23) வரவழைத்து விநியோகித்தனர்.
இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணும் நிகழ்வின் போது ஊட்டச்சத்துக்கள், சிறுதானியங்கள் மற்றும் குழந்தையின் தேவைகள் அடங்கிய பொதிகள் ஒவ்வொன்றும் தலா 10,000/= ரூபா பெறுமதியான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பொதிகளை பெற்றுக்கொண்டனர். படையினரின் வேண்டுகோளுக்கு இணங்க திருமதி சாந்திலதா, திருமதி இந்திராணி சுவர்ணலதா, திருமதி குமுதுனி, திரு வசந்த தியவதன மற்றும் திரு கமலாசிறி தியவதன ஆகியோர் நிகழ்விற்கான நிதியுதவியை வழங்கினர்.
22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஎஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்பீ அவர்களின் கட்டளையின் கீழ் இந்த தொண்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
222 வது காலாட் பிரிகேட்டின் பிரிகேடியர் எச்கேஎஸ் திலகரத்ன மற்றும் 5 தொ) இலங்கை பீரங்கிப் படையணியின் கட்டளை அதிகாரி டபிள்யூடபிள்யூஎம்பீ/பி வெகடபொல யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் மேற்பார்வையினால் இப்பணி ஏற்பாடு செய்யப்பட்டது.