10th June 2023 17:38:30 Hours
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 22 வது காலாட் படைப்பிரிவின் 221 வது காலாட் பிரிகேட் படையினர் திருகோணமலை வில்கமுவ வித்தியாலயத்தில் 70 மாணவர்களுக்கு விசேட மதிய உணவுவை (மே 31) வழங்கினர்.
221 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் ஏகே பீரிஸ் ஆர்எஸ்பீ அவர்களின் அனுசரனையில் சிவில், இராணுவ ஒத்துழைப்புத்திட்டமாக இது முன்னெடுக்கப்பட்டது.
மேலும், 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்பி அமுனுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ இந்த உன்னத திட்டத்திற்கு தனது ஆசிகளை வழங்கினார். 2 வது (தொ) கஜபா படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் டபிள்யூ வர்ணகுலசூரிய மற்றும் அவரது படையினர் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.