04th November 2023 22:43:36 Hours
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 22 வது காலாட்படைப் பிரிவில் 2023 ஒக்டோபர் 23 முதல் 31 வரையில் 7 வது களப் பொறியியல் படையணியின் உதவியுடன் பிரிகேட் மற்றும் படையலகுகளின் தேடல் மற்றும் மீட்புக் குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 30 சிப்பாய்களுக்கு சிறப்பு அடிப்படை மோட்டார் படகுப் பயிற்சி நடாத்தப்பட்டது.
22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜீஎம்என் பெரேரா ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசி அவர்களின் கருத்திற்கமைய அடிப்படை மோட்டார் படகு பயிற்சி பாடநெறி எண்- 1 மோட்டார் படகுகளை இயக்குதல், பாகங்களை அடையாளம் காண்பது, திருத்தம் செய்தல் சவாலான சூழ்நிலையில், மற்றும் குறிப்பாக வெள்ள சூழ்நிலைகளில் படகின் திருத்தல் மற்றும் இயக்கம் போன்ற விடயங்களில் அறிவூட்டப்பட்டது.
15 வது இலங்கை இலோசாயுத காலாட் படையின் சிப்பாய் ஆர்எம்எஸ் புஷ்ப குமார தகுதி வரிசையில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார். 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதியுடன், 22 வது காலாட் படைப்பிரிவின் பிரதி தளபதி பிரிகேடியர் கேகேஎஸ் பெரகும் ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ அவர்கள் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் புதன்கிழமை (ஒக். 01) இடம் பெற்ற சான்றிதழ் வழங்கும் விழாவில் கலந்து கொண்டனர்.