10th June 2023 17:55:55 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் ஜிஎம்என் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி அவர்கள், திருகோணமலை 22 வது காலாட் படைப்பிரிவின் 29 வது தளபதியாக இராணுவ சம்பிரதாயங்கள் மற்றும் மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் புதன்கிழமை (ஜூன் 07) கடமைகளை பொறுப்பேற்றார்.
22 வது காலாட் படைப்பிரிவுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தளபதி, பணிநிலை அதிகாரிகளால் அன்புடன் வரவேற்கப்பட்டதுடன், அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் வழங்கப்பட்டது.
பின்னர், புதிய தளபதி தனது கையொப்பத்தை ஒரு முறையான ஆவணத்தில் இட்டு, புதிய நியமனத்தை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டதை அடையாளப்படுத்தினார்.
பிறகு, அனைத்து நிலையினருக்கும் உரையாற்றுவதற்கு முன்பு வளாகத்தில் ஒரு மரக்கன்று நடுவதற்கு அழைக்கப்பட்டார். தளபதி அவர்களுக்கு படைப்பிரிவின் பொறுப்புப் பகுதி பற்றியும் விளக்கினார். பணிநிலை அதிகாரிகள், பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.