Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th April 2024 16:38:40 Hours

22 வது காலாட் படைப்பிரிவினால் பாடசாலை மாணவர்களுக்கு வலைப்பந்து பயிற்சி

22 வது காலாட் படைப்பிரிவு 2024 ஏப்ரல் 05 முதல் 09 வரை திருகோணமலை மாவட்ட பாடசாலை மாணவர்களின் பங்கேற்புடன் 22 வது காலாட் படைப்பிரிவு விளையாட்டு மைதானத்தில் வலைப்பந்து பயிற்சியை நடாத்தியது.

இந்த பயிற்சி நிகழ்ச்சி 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டது.

முன்னாள் தேசிய வலைப்பந்து வீராங்கனையான படைப்பிரிவு தளபதியின் துணைவியார் திருமதி டப்ளியூஏ சஞ்சீவனி வனசிங்க அவர்கள் இராணுவ வலைப்பந்தாட்ட வீரர்களின் உதவியுடன் நிகழ்ச்சியை நடாத்தினார்.

பயிற்சி நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், அதிபர்கள், பாடசாலைகளின் விளையாட்டு ஆசிரியர்கள், திருகோணமலை மாவட்ட விளையாட்டு அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.