06th April 2023 20:20:57 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 21 வது காலாட்படை பிரிவின் 211 வது காலாட் பிரிகேட் படையினர் புதன்கிழமை (ஏப்ரல் 05) லிந்தவெவ தும்மினேகம சனசமூக மண்டபத்தில் மதவாச்சி லிந்தவெவ கிராம அலுவலர் பிரிவில் உள்ள வறிய குடும்பங்களுக்கு தலா ரூ.8,000.00 பெறுமதியான 100 உலர் உணவுப் பொதிகளை விநியோகிக்கும் சமூக நல செயற்றிட்டத்தை ஏற்பாடு முன்னெடுத்தனர்.
கடவத்தையில் உள்ள சரண பௌத்த அறக்கட்டளையுடன் இணைந்த பிரபல வர்த்தகரான திரு. சுனில் விஜேவர்தன படையினரின் ஒருங்கிணைப்பின் மூலம் இந்த திட்டத்திற்கு நிதியளித்தார். 211 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் சமிந்த விஜயரத்ன அவர்களின் வழிகாட்டலின் கீழ் படையினர் மக்களின் சிரமங்களைக் கருத்திற்கொண்டு இந்தத் திட்டத்தை முன்னெடுத்தனர்.
211 வது காலாட் பிரிகேட் சிவில் விவகார அதிகாரி மேஜர் ஆர்எம்எஸ்ஜே ராஜநாயக்க, பிரதேசவாசிகள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளைத் தணிக்கும் நோக்கத்துடன் அவர்களை ஓரிடத்தில் ஒன்று கூட்டி வழங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இவ் வழங்கல் நிகழ்வில் பிரதம அதிதியாக 21 வது காலாட் படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார, 21 வது காலாட் படைப்பிரிவின் கேணல் ரொஷான் கன்னங்கர, மதவாச்சி உதவி பிரதேச செயலாளர் திரு. எஸ் கௌசிகன், சிரேஷ்ட அதிகாரிகள்,அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.