Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th October 2023 20:01:28 Hours

211 வது காலாட் பிரிகேட் படையினரால் பதவிய வைத்தியசாலைக்கு இரத்த தானம்

2023 ஒக்டோபர் 08 பதவிய வைத்தியசாலை வளாகத்தினுள் கொழும்பு றோயல் கல்லூரியின் செஞ்சிலுவைச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வின் போது 21 வது காலாட் படைப்பிரிவின் 211 வது காலாட் பிரகேட்டின் படையினர் தானாக முன்வந்து இரத்த தானம் செய்தனர்.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பீ.எ.டி.டபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ மற்றும் 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஐ.எ.என்.பி பெரேரா ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஆகியோர்களின் வழிக்காட்டல் மற்றும் எண்ணகருவிற்கமைய 21 வது படைப் பிரிவினர் இரத்த தானம் வழங்கும் சமூகம் சார்ந்த திட்டத்தை முன்னெடுத்தனர்.

கொழும்பு றோயல் கல்லூரியின் செஞ்சிலுவைச் சங்கத்தின் 44 வது வருடாந்த இரத்த தான நிகழ்வுடன் இணைந்து இத்திட்டம் நடாத்தப்பட்டதுடன், 211 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஐ.என் கந்தனாராச்சி ஆர்எஸ்பீ, 211 காலாட் பிரிகேட், 9 வது கஜபா படையணி, 5 வது (தொ) கஜபா படையணி, படையலகு பயிற்சி பாடசாலை, இராணுவ சேவைப் படையணியின் 330 வது குழு ஆகியவற்றைச் சேர்ந்த 81 அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இத் திட்டத்தில் கலந்து கொண்டனர்.

பதவிய வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் உதவியாளர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் அன்றைய நிகழ்ச்சிக்கு உதவியளித்தனர்.