08th April 2024 13:37:04 Hours
21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்.எச்.கே.எஸ்.எஸ் ஹேவகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சீடிஎஸ் பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 21 வது காலாட் படைப்பிரிவின் 36 வது ஆண்டு நிறைவு விழா 04 ஏப்ரல் 2024 தொடர்ச்சியான நிகழ்வுகளுடன் பெருமையுடன் கொண்டாடப்பட்டது.
ஆண்டு நிறைவை முன்னிட்டு, படையினரின் ஒத்துழைப்புடன் அனைத்து கட்டளை அமைப்புக்களின் அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் பணியாளர்களுக்கு இடையே நட்பு ரீதியான கிரிக்கெட் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், படையினருக்கு ஆசி வழங்கும் நோக்கில் இரவு முழுவதும் ‘பிரித்’ பாராயண நிகழ்வும் மகா சங்க உறுப்பினர்களுக்கு தானமும் வழங்கப்பட்டது.
ஆண்டு நிறைவை முன்னிட்டு 7 வது (தொ) இலங்கை கவசப் வாகன படையணி படையினரால் படைப்பிரிவின் தளபதிக்கு நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.
பின்னர், படைப்பிரிவின் தளபதி குழுபடம் எடுத்து கொண்டதுடன் அனைத்து நிலையினருடன் மதிய உணவு விருந்துபசாரத்தில் கலந்துகொண்டார்.
நிகழ்வின் நிறைவாக மாலை வேளையில் வளாகத்தில் படையினரை மகிழ்விக்கும் இசை நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.