Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th January 2024 18:11:41 Hours

21 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி பதவியேற்பு

இலங்கை பீரங்கிப் படையணியின் மேஜர் ஜெனரல் எச்எச்கேஎஸ்எஸ் ஹேவகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக வியாழக்கிழமை (ஜனவரி 11) அனுராதபுரத்தில் உள்ள படைப்பிரிவு தலைமையகத்தில் மத ஆசீர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் பதவியேற்றார்.

9 வது கஜபா படையணி படையினரின் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதன்பின், புதிதாக நியமிக்கப்பட்ட காலாட் படைப்பிரிவின் தளபதி மகா சங்க உறுப்பினர்களின் 'செத் பிரித்' பாராயணங்களுக்கு மத்தியில் தனது புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில், உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.

பின்னர் அவர் ஒரு மரக்கன்று நட்டு, குழு படங்கள் எடுத்துக் கொண்டதுடன், படையினருக்கு உரையாற்றினார். மேலும் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்தின் போது படையினருடன் உரையாடினார். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.