Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st November 2023 21:03:53 Hours

20 வது கஜபா படையணி படையினரால் புல்மோட்டையில் வெள்ள நீர் அகற்றும் பணி முன்னெடுப்பு

புல்மோட்டையில் உள்ள 20 வது கஜபா படையணி படையினர், செவ்வாய்கிழமை (நவம்பர் 14) அன்று மழைவீச்சியினால் உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் வீடுகளுக்கு சேதம் ஏற்படுவதனை தடுப்பதற்காக வெள்ள நீர் செல்வதற்கு தடையாக இருந்த வடிகால் அமைப்பை சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அதன்படி, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு, புல்மோட்டை தொகுதி எண் 1, ஹைரியா வீதி மற்றும் சத்குவாநகர் புல்மோட்டை தொகுதி எண் 2, ஆகிய இடங்களில் துப்புரவு பணிகளை 22 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஜீஎம்என் பெரேரா ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியு மற்றும் 221 வது பிரிகேட் தளபதி கேணல் ஏகே பீரிஸ் ஆர்எஸ்பீ ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டன.

20 வது கஜபா படையணி கட்டளை அதிகாரியின் நெருக்கமான கண்காணிப்பு வெள்ள நீரை வெளியேற்றி இயல்பு நிலைக்கு கொண்டு வர 3 அதிகாரிகள் மற்றும் 15 சிப்பாய்கள் பணியமர்தப்பட்டன.

மேலும், குச்சவெளி பிரதேச சபையினால் தேவையான தொழிலாளர்களும் அசுத்தமான மண் மற்றும் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றுவதற்காக டிப்பர் லாரி மற்றும் 4 டிராக்டர்கள் போன்ற கனரக உபகரணங்கள் வழங்கப்பட்டன.