19th April 2024 20:12:18 Hours
புத்தாண்டு கொண்டாட்டங்களின் ஆரம்பத்தை குறிக்கும் வகையில் ருஹுணு மகா கதிர்காமம் கோவிலின் முதலாவது ஊர்வலம் 2024 ஏப்ரல் 14 ஆம் திகதி ருஹுணு கதிர்காம பஸ்நாயக்க நிலமே அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்றது.
12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சி.எஸ் முனசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி ஐஜி மற்றும் 20 வது இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் 20 வது இலங்கை சிங்க படையணி படையினர் கதிர்காம கோயில் ஊர்வலத்தில் ஈடுபட்ட 4,000 க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு இரவு உணவு வழங்கினர்.
ருஹுனு மகா கதிர்காமம் ஆலய நிர்வாக சபையின் நிதியுதவியுடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்படது.