16th April 2024 15:34:01 Hours
மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2 வது (தொ) இலங்கை சிங்க படையணி படையினர் 06 ஏப்ரல் 2024 அன்று ஹந்தான மலைத்தொடரில் காணாமல் போன தம்பதிகளைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
அதே நாள் பிற்பகல் படையினர் செய்தி அறிந்தவுடன் உடனடியாகச் செயல்பட்டு மறுநாள் விடியும் முன் காணாமல் போன ஜோடியைக் கண்டுபிடித்தனர்.
111 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் 2 வது (தொ) இலங்கை சிங்க படையணி கட்டளை அதிகாரி ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் இரண்டு அதிகாரிகள் மற்றும் ஐந்து சிப்பாய்கள் உள்ளடக்கிய தேடுதல் குழு இந்த நடவடிக்கையில் பங்கேற்றது.