26th November 2023 22:35:41 Hours
2 வது (தொ) இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் 27 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு படையினர் வெள்ளிக்கிழமை (நவம்பர் 24) கல்கிசை கரையோரப் பகுதியில் உள்ள கடற்கரைப் பகுதியைச் சுத்தப்படுத்தும் சமூக நலத்திட்டத்தினை முன்னெடுத்தனர்.
கட்டளை அதிகாரி மற்றும் 40 படையினர் இத் தூய்மையாக்கல் பணியில் ஈடுபட்டனர். இலங்கை இராணுவ பொது சேவை படையணி நிலைய தளபதி 2 வது (தொ) இலங்கை இராணுவ பொது சேவை படையணி கட்டளை அதிகாரி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இப் பணி முன்னெடுக்கப்பட்டது.