06th December 2023 19:58:37 Hours
2 வது (தொ) இலங்கை இராணுவ பொதுச் சேவைப் படையணி வெள்ளிக்கிழமை (டிசம்பர் 1) தனது 27 வது ஆண்டு நிறைவை இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய பனாகொட இராணுவ வளாகத்தின் கொண்டாடியது.
இராணுவ பொதுச் சேவைப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ டபிள்யூ எச்ஆர்ஆர்விஎம்என்டிகேபி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ மற்றும் நிலைய தளபதி கேணல் எம்கேஎஸ்எஸ் டி சில்வா, ஆகியோர் இந் நிகழ்விற்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினர்.
2 வது இலங்கை இராணுவ பொதுச் சேவைப் படையணியின் கட்டளை அதிகாரிக்கு படையினரால் மரியாதை அணிவகுப்பு வழங்கும் முன் 2 வது இலங்கை இராணுவ பொதுச் சேவைப் படையணியின் படையினர் நினைவு தூபிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரம் மற்றும்மாலையில் இசை நிகழ்ச்சியுடன் ஆண்டுவிழா நிறைவுற்றது.