Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th May 2018 16:44:39 Hours

2 ஆவது (தன்னார்வ) இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியின் 38 ஆவது ஆண்டு விழா

கிழக்கு பாதுகாப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 2 ஆவது (தன்னார்வ)இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியின் 38 ஆவது ஆண்டு விழா நிகழ்வானது இப் படையணியின் கட்டளை தளபதி லெப்டினென்ட் கேர்ணல் பாத்திய ஜயவீர அவர்களின் பணிப்புரைக்கமைய விசேட மத வழிப்பாடுகளுடன் (26) ஆம் திகதி சனிக் கிழமை கொண்டாடப்பட்டது.

இந் நிகழ்வின் முதல் கட்டமாக படையினர்களால் போதி பூஜை, ஆசிர்வாத பூஜையானது சேமாவதி விகரையில் இடம் பெற்றது.

ஆத்துடன் ஆண்டு விழாவான (26) ஆம் திகதி கட்டளை தளபதியவர்களுக்கு சமிக்ஞை படையணியின் படையணியினரகளால் இராணுவ முறைப்படி அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஆணைச்சீட்டு அதிகாரிகளுக்காக அமைக்கப்பட்ட உணவு சாலை கட்டளை தளபதியவர்களால் திறந்துவைக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு ஓய்வு பெறும் சிரேஷ்ட ஆணைச்சீட்டு அதிகாரிகள் மற்றும் ஆணைச்சீட்டு அதிகாரிகள் உட்பட சிவில் உத்தியோகத்தவர்களுகளின் சேவையை கௌரவ படுத்தும் நிமித்தம் நினைவு சின்னங்கள் வழங்கப்ட்டது.

அத்துடன் நிகழ்வின் இறுதியில் கடான பொல்லேகல முப்படையினர்களின் இல்லத்தின் 22 படையினர்களுக்கு மதிய உணவுகள் வழங்கியதுடன் கெலிப்சோ இசைக்குழுவினர்களால் இசை நிகழ்வு வர்ணமயமாக்கப்பட்டது. படையினருக்கு தேவையான பொருட்களுடன் கூடிய பரிசு மற்றும் சேவையை கௌரவிக்கும் நோக்குடன் நினைவு சின்னங்கள் வழங்கப்பட்டது.

Best Nike Sneakers | NIKE