20th November 2023 20:26:50 Hours
2 வது (தொ) விஜயபாகு காலாட் படையணியின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நினைவு தூபி வவுனியா ஈரற்பெரியகுளம் 2 வது (தொ) விஜயபாகு காலாட் படையணியில் 5 நவம்பர் திறந்து வைக்கப்பட்டது.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியு.பீ.எ.டி.டப்ளியு நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியு அவர்கள் 2 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி கட்டளை அதிகாரி மேஜர் ஆர்எம்கேபி ரத்நாயக்க அவர்களின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
பிரதம அதிதியின் வருகையின் பின்னர், அனைத்து அழைப்பாளர்களும் புதிய 2 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி போர்வீரர் நினைவுத்தூபிக்கு முன்பாக சமய அனுஷ்டானங்களில் கலந்துகொண்டனர். நினைவுதூபி திறக்கப்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு, ரண பெர, அஞ்சலி அணிநடை, இரண்டு நிமிட மெளன அஞ்சலி என்பன உச்சபட்ச தியாகத்தை செய்த 134 போர் வீரர்களை கௌரவிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டது.
21 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஐஏஎன்பீ பெரேரா ஆர்டப்ளியுபீ யுஎஸ்பீ என்டியு பீஎஸ்சி, 213 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எம்கேடிபி மாபலகம பீஎஸ்சி, சிரேஷ்ட அதிகாரிகள், ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், ஓய்வுபெற்ற அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் 134 போர்வீரர்களின் உறவினர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.