Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th July 2023 19:07:03 Hours

2 வது (தொ) இலங்கை சிங்க படையணி படையினரால் குளவிக்கொட்டுக்கிலக்கான பல்கலைகழக மாணவர்கள் மீட்பு

மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தின் 11 வது காலாட் படைப்பிரிவின் 111 வது காலாட் பிரிகேடின் 2 வது (தொ) இலங்கை சிங்க படையணி படையினர் சனிக்கிழமை (ஜூலை 1) இலங்கை தொழில்நுட்ப பல்கலைகழக மாணவர்கள் ஹந்தானை மலைகளில் நடைப்பயணம் மேற்கொள்ளும் போது குளவிக்கொட்டுக்கிலக்காகியதுடன் அவர்களை கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான உடனடி ஆதரவை வழங்கினர்.

வாரயிறுதியில் 276 இலங்கை தொழில்நுட்ப பல்கலைகழக மாணவகளை கொண்ட குழுவினர் மலையேறிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக குளவிக்கொட்டுக்கிலக்காகியதுடன் அவை அவர்களுக்கு மிகுந்த வலியினையும் வீக்கத்தினையும் ஏற்படுத்தியது அதனை தொடர்ந்து அவர்கள் மருத்துவ உதவிகளுக்கு உடனடியாக இராணுவ படையினரை நாடினார்கள்.

இருப்பினும் இளங்கலைப் பட்டதாரிகளில் ஒருவர் 2 வது (தொ) இலங்கை சிங்க படையணி கட்டளை அதிகாரியை தொடர்பு கொண்டு உதவியை நாடினார். அதனை தொடர்ந்து 2 வது (தொ) இலங்கை சிங்க படையணி கட்டளை அதிகாரி 1990 ‘சுவசெரிய’ அதிகாரிகள் உட்பட படையினர் குழுவினை அனுப்பி பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

11 வது காலாட் படைப்பிரிவின் பிரதி தளபதி, 111 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோர் அவசரநிலையினை கண்காணித்து 2 வது (தொ) இலங்கை சிங்க படையணி கட்டளை அதிகாரி மற்றும் சிப்பாய்களுக்கு அவசர நடவடிக்கைக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினர்.