02nd November 2023 20:36:45 Hours
பனாகொட 2 வது (தொ) இலங்கை இராணுவ மருத்துவ படையணி வளாகத்தில் வீரமரணம் அடைந்த அனைத்து போர்வீரர்களினதும் ஆத்மா சாந்திக்காக வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 27) தர்ம பிரசங்கம் நடைபெற்றது.
வண.வல்பொல கௌத்தம தேரர் தர்ம பிரசங்கத்தையும் அதனைத் தொடர்ந்து ஆத்மா சாந்தி பிரார்தனையும் நிகழ்த்தினார். 2 வது (தொ) இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் கட்டளை அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.