Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd September 2023 18:00:17 Hours

2 வது கொமாண்டோ படையணியினரால் கிளிநொச்சி குடும்பத்திற்கு புதிய வீடு

கிளிநொச்சி 1 ஆம் படைத் தலைமையகத்தின் நலத்திட்டத்தின் கீழ் 2 வது கொமாண்டோ படையணியின் படையினர் கிளிநொச்சி திருமுருக்கண்டியில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கு புதிய வீட்டை நிர்மாணித்தது. சிப்பாய்கள் ஒன்றினைந்து வீட்டுத்தேவைக்கான செலவை திரட்டினர்.

2 வது கொமாண்டோ படையணிக்கு அருகில் நிரந்தர வருமானம் மற்றும் வாழ்வாதாரம் இல்லாமல் திருமணமாகி ஒரு மகள் மற்றும் ஒரு மகனுடன் தென்னை ஓலைகளால் வேயப்பட்ட வீட்டில் திரு கே தீஸ்வரன் அவர்கள் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவர் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் கட்டத்தெடங்கிய புதிய வீட்டின் மீதி கட்டுமானப்பணியை 2 வது கொமாண்டோ படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் படையினர் மேற்கொண்டனர்.

அண்மையில் உடல் நலக்குறைவு காரணமாக இரு முழங்கால்களிலும் அறுவை சிகிச்சை செய்து, நடக்க முடியாமல் சிரமப்பட்ட பயனாளிக்கு 2 வது கொமாண்டோ படையணியின் கட்டளை அதிகாரி வழங்கிய வழிகாட்டுதல்களின்படி சிப்பாய்கள் தாமாகவே முன்வந்து கட்டுமானத்தில் உள்ள அவரது வீட்டை முடிப்பதற்கான திட்டத்தைத் தொடங்கினர்.

2 வது கொமாண்டோ படையணியின் சிப்பாய்கள் உள்நாட்டில் வழங்கப்பட்ட மூலப்பொருட்களைக் கொண்டு கட்டுமானப் பணியை தொடங்கியதுடன், தேவையான நிதி சிப்பாய்களினால் சேகரிக்கப்பட்டது. மழைக்காலம் தொடங்குவதற்கு முன் 3 வாரங்கள் என்ற குறுகிய காலத்தில் சிப்பாய்கள் சமையலறை, குளியலறை மற்றும் தனி கழிப்பறையுடன் வீட்டை முடித்து அவர்களிடம் ஒப்படைத்தனர். இந்நிகழ்வின் போது, உலர் உணவுப் பொதிகள் மற்றும் பிள்ளைகளுக்கான பாடசாலை உதவிப் பொருட்களையும் குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.

கொமாண்டோ படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பீஜிபீஎஸ் ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ, மற்றும் 53 வது காலாட் படைப்பிரிவின் தளபதி ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், அவர்களுடன் கொமாண்டோ படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் பிஎம்எஸ்கேகே தர்மவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, 2 வது கொமாண்டோ படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.