21st April 2023 21:38:47 Hours
கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் 22 வது காலாட் படைப்பிரிவின் 221 வது காலாட் பிரிகேடின் 2 வது (தொ) கஜபா படையணி படையினர் சிவில்-இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் திருகோணமலை பிரதேசத்திலுள்ள அனைத்து இன சமூகங்களுக்கிடையில் நல்லெண்ணம், ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்க உணர்வுகளை ஊக்குவிக்கும் எண்ணத்துடன் முஸ்லிம் சமூகத்திற்கு சுவையான உணவு மற்றும் பானங்களை வழங்கி நோன்பு துறக்கும் (இப்தார்) நிகழ்வினை நடாத்தினர்.
திருகோணமலை நகரின் மையப்பகுதியில் வசிக்கும் 50 முஸ்லிம்களை கஜபா படையணிக்கு அழைத்த ஏப்ரல் 18 அன்று படையினர் சூரிய அஸ்தமனத்தில் மாலை நோன்பு திறக்கும் நிகழ்வை நடாத்தினர்.
22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ் பி அமுனுகம ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு திட்டத்திற்கான வழிகாட்டுதல்களை வழங்கியதுடன் 2 வது (தொ) கஜபா படையணி கட்டளை அதிகாரி மேஜர் டப்ளியு வர்ணகுலசூரிய அவர்களின் மேற்பார்வையின் கீழ் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.