01st January 2024 19:05:36 Hours
கொழும்புத்துறையில் வசிக்கும் நான்கு பிள்ளைகளைக் கொண்ட ஏழை குடும்பத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்குடன் 17 வது கெமுனு ஹேவா படையணியின் படையினர் புதிய வீடொன்றை நிர்மாணித்து 23 டிசம்பர் 2023 அன்று பயனாளிகனிடம் கையளித்தனர்.
மேஜர் ஜெனரல் எஸ்.டபிள்யூ.பி வெலகெதர ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களின் கீழ் 512 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ், படையினர் மூன்று மாதங்களுக்குள் வீட்டை நிர்மணித்து முடித்தனர். இத்திட்டத்திற்கான நிதி உதவி கனடாவில் வசிக்கும் அனுசரனையாளர்களாகிய துரையப்பா குடும்பத்தினரால் வழங்கப்பட்டதுடன், யாழ். படையினரால் நிர்மாணிக்கப்பட்ட 772 வது வீடு இதுவாகும்.
இந்நிகழ்வில், 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 17 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் கொழும்புத்துறை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.