12th July 2023 20:07:50 Hours
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் ஒருங்கமைப்பில் செபலசித்தட்ட தாம் சிசில எனும் ஆன்மீக சொற்பொழிவு 17 வது பொறியியல் சேவை படையணியின் படையினருக்கு வண. வெலிமட சத்தசீல தேரர் அவர்களால் ஜூலை 8 தியத்தலாவ 17 வது பொறியியல் சேவை படையணியில் நிகழ்த்தப்பட்டது.
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கட்டளையின் கீழ் பணிபுரியும் 600 க்கும் மேற்பட்ட படையினர் இந்த ஆன்மிக சொற்பொழிவில் பங்குபற்றினர்.
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூடபிள்யூஎச்ஆர்வீஎம்என்டிகேபி நியன்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ வீஎஸ்வீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிக்காட்டலின் பேரில் 17 வது பொறியியல் சேவை படையணியின் கட்டளை அதிகாரியினால் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.