07th November 2023 20:28:41 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 56 வது காலாட் படைப்பிரிவின் 562 வது காலாட் பிரிகேடின் 17 வது இலங்கை இலேசாயுத காலாட் படையினர் வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் மின் தூக்கி செயலிழந்தமையினால் நோயாளிகளுக்கு அவர்களின் உதவிகளை வழங்கினர்.
மின் தூக்கி செயலிழந்தமையினால் நோயாளிகளை மேல்மாடியில் இருந்து கீழே கொண்டு செல்வதில் சிரமத்தை எதிர்கொண்ட மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் உதவியை நாடினர்.
அதன்படி, செப்டெம்பர் மாதம் தொடக்கம் கடந்த இரண்டு மாதங்களில் மின்தூக்கியில் இடையிடையே ஏற்பட்ட பிரச்சினையினால் நோயாளிகளின் போக்கு வரத்திற்காக 17 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி 4 நாட்களுக்கும் மேலாக 5 சிப்பாய்களை அனுப்பி வைத்தனர்.
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 562 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் 17 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோர் மனிதாபிமான இத்திட்டத்திற்கு உதவினர்.