12th August 2023 18:14:51 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 14 வது காலாட் படை பிரிவின் கீழ் உள்ள 143 வது காலாட் பிரிகேடின் 16 வது கஜபா படையணி படையினர் வெள்ளிக்கிழமை (ஓகஸ்ட் 11) மாலை கருவலகஸ்வெவ பகுதியில் உள்ள தப்போவ வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை உடனடியாக அணைக்க நடவடிக்கை எடுத்தனர்.
மாவட்ட வன அதிகாரி காட்டுத்தீ பற்றி இராணுவத்திற்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து 16 வது கஜபா படையணியின் 01 அதிகாரி மற்றும் 30 சிப்பாய்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு படையினர் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து கிட்டத்தட்ட 200 ஏக்கர் தாவரங்கள் மற்றும் வனப் பகுதிகளுக்கு பரவியிருந்த தீயை அணைக்க உதவினர்.
மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 143 வது பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ் 16 வது கஜபா படையணி கட்டளை அதிகாரி இத்திட்டத்தினை முன்னெடுத்தார்.