Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th February 2024 17:36:58 Hours

15 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் ஹமீடியா விளையாட்டு கழகம் காற்பந்து போட்டியில்

15 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினர் ஹமீடியா விளையாட்டுக் கழகத்துடன் இணைந்து 2024 பெப்ரவரி 8 முதல் 11 வரை மொல்லிப்பொத்தானை ஹமீடியா மைதானத்தில் காற்பந்தாட்டப் போட்டியை சிவில்-இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தவும், அப்பகுதி இளம் விளையாட்டு திறமைகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டும் ஏற்பாடு செய்தனர்.

இப்போட்டியில் முப்பது உதைபந்தாட்ட அணிகள் ஆர்வத்துடன் பங்குபற்றியதுடன் கிண்ணியா 'நோஹா' உதைபந்தாட்ட அணி உற்சாகமான போட்டிக்கு மத்தியில் சம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியது.

22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஎஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் போட்டியின் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக்கிண்ணங்களை வழங்கினார்.

223 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் வை.எச்.பீ ரங்கஜீவ யூஎஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் போட்டிகளைக் கண்டுகளித்தனர்.