24th February 2023 19:30:13 Hours
மத்தேகொட வித்யதீப மஹாவித்தியாலயத்தின் வேண்டுகோளுக்கு இணங்க 14 வது காலாட்படை பிரிவின் 142 வது பிரிகேடின் இலங்கை பீரங்கிப் படையின் 15 வது ட்ரோன் படையணியின் இராணுவ வீரர்கள் பெப்ரவரி 20-22 ஆம் திகதிகளில் விளையாட்டுப் போட்டி அணிவகுப்புக்காக மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக தமது ஆதரவை வழங்கினர்.
மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மற்றும் 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி அவர்களின் கட்டளையின்படி 142 வது பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ் இராணுவப் படையினர் மாணவர்களுக்கு அணிநடைப்பயிற்சி மற்றும் மரியாதை அணிவகுப்பு என்பவற்றிக்கு பயிற்சி வழங்கினர்.