Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th October 2022 19:46:52 Hours

144 வது பிரிகேட் படையினர் ‘இடர் முகாமைத்துவம்’ மற்றும் 'கலக கட்டுப்பாடு' தொடர்பான ஒத்திகை

மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 144 வது பிரிகேட் படையினரால் 2022 அக்டோபர் 02 அன்று ‘இடர் முகாமைத்துவம்’, 'கலகம் மற்றும் ஆர்ப்பாட்டம் கட்டுப்பாடு' தொடர்பான செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

14 வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் ரொஷான் ஜயமான்ன மற்றும் 144 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் விந்தன கொடித்துவக்கு ஆகியோரின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக களனிமுல்ல 2 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி முகாம் வளாகத்தில் இந்த செயலமர்வு இடம்பெற்றதுடன், அவசரகால அனர்த்த நடவடிக்கை செய்முறை பயிற்சி களனி ஆற்றுக்கரையில் இடம் பெற்றது.

5 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சிப்பாய்கள் தற்போது 2 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி முகாமில் அக்டோபர் 2 தொடக்கம் 9 வரை 5 நாட்கள் கொண்ட ‘இடர் முகாமைத்துவம்’ மற்றும் ‘கலவரக் கட்டுப்பாடு’ செயலமர்வில் பங்குபற்றுவதுடன், 2 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் நன்கு பயிற்சி பெற்ற சிப்பாய்கள் இந்த செயலமர்வை நடாத்தினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, வெள்ள நிவாரணத்தின் மீட்பு பணிகள் மற்றும் கலகக் கட்டுப்பாட்டுக்கான அவசரகால மீட்பு பணிகள் குறித்து இராணுவ வீரர்கள் பாட ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் கற்பிக்கப்பட்டனர். 5 வது களப் பொறியியலாளர் படையணி மற்றும் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படையினரும் இந்த செயலமர்வை நேரில் பார்வையிட்டனர்.