10th July 2023 23:24:15 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 144 வது காலாட் பிரகேடின் 2 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினர் சனிக்கிழமை (ஜூலை 8) களனி ரஜ மகா விகாரை வளாகத்தில் 1000 இற்கும் மேற்பட்ட பெண் பக்தர்களுக்கு உணவு வழங்கினர்.
ஒரு வேண்டுகோளுக்கு இணங்க, இராணுவ வீரர்களின் மனிதவளம் திட்டத்திற்கு வழங்கப்பட்டது. 50 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அன்னதானம் வழங்கும் ஏற்பாட்டாளர்களுடன் கைகோர்த்தனர்.
இதன்படி, 144 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டலின் கீழ் 2 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி கட்டளை அதிகாரி இந்த நிகழ்வில் இராணுவத்தின் பங்கேற்பை கண்காணித்தார்.
மேலும் இந்நிகழ்வில் இராணுவத்தினரின் பங்களிப்பு நிகழ்வு ஏற்பாட்டாளர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டது.