22nd April 2024 10:00:34 Hours
144 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எம்.கே.டி.பீ மாபலகம பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டலின் கீழ் 2024 ஏப்ரல் 05 ஆம் திகதி பத்தரமுல்லை ஸ்ரீ சுபூதி தேசிய பாடசாலையின் 63 மாணவ தலைவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி வழங்கப்பட்டது.
பல்வேறு செயற்பாடுகளை உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சி 2 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 10 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.