09th April 2024 13:11:44 Hours
144 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எம்கேடிபி மஹாபலகம பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2024 ஏப்ரல் 02 அன்று பெலவத்தை வித்தியவர்தன கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இத் திட்டம் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தின் தீங்கு விளைவிக்கும் விளைவுகள் மற்றும் போதைப்பொருளை எதிர்த்துப் போராடுவதற்கான வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு அறிவூட்டுவதை நோக்கமாக கொண்டதாகும். புனர்வாழ்வு பணிப்பகத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரி தேசிய மாணவ சிப்பாய் படையணியின் லெப்டினன் கேணல் ஈஆர்எஸ் தயானந்த அவர்களின் மேற்பார்வையின் கீழ் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. 100 மாணவர்கள் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.
மேலும் இந்நிகழ்விற்கு தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் தடுப்புக் கல்வி மற்றும் பயிற்சிப் பிரிவின் உதவிக் கல்வி மற்றும் தகவல் அதிகாரியால் உதவி வழங்கப்பட்டது.