Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd June 2023 20:15:23 Hours

143 வது பிரிகேடின் 16 வது கஜபா படையணி மற்றும் முதலாவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினரால் தப்போவவில் புதிய வீடமைப்பு

மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் 143 வது காலாட் பிரிகேடின் 16 வது கஜபா படையணி மற்றும் முதலாவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினர், ஆதரவற்ற குடும்பத்தின் வீடற்ற நிலைமையை 16 வது கஜபா பயைணியின் கட்டளை அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து தேசத்தை கட்டியெழுப்பும் பணிகளில் தங்கள் பங்கை சேர்ப்பது மற்றும் சிப்பாய்களிடையே உறவுகளை வளர்ப்பதற்காகவும் தப்போவ, பிரதீபாகம ஆதரவற்ற குடும்பத்திற்கு புதிய வீடொன்றை அமைத்துக் கொடுத்தனர்.

கலா ஓயா பயிற்சிப் பாடசாலையின் முன்னாள் தளபதி பிரிகேடியர் ஏஎம்எஸ் பிரேமவன்ஷ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ (ஓய்வு). அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தேவையான பண உதவி மற்றும் மூலப்பொருட்களை வழங்கிய திரு சஹான் ராஜபக்ஷ அவர்களின் பெருந்தன்மையின் மூலம் இத் திட்டம் சாத்தியமானதுடன், 143 வது காலாட் பிரிகேட்டின் தளபதி கிட்ச்சிலன் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் 16 வது கஜபா படையினர் மற்றும் முதலாவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினரின் கூட்டுச் செயற்பாட்டினால் இத் திட்டம் சாத்தியமானது.

143 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் டிஎம்எப் கிட்சிலன் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் அழைப்பின் பேரில் பிரதம விருந்தினராக மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், நிரந்தர தங்குமிடம் இல்லாத பல குழந்தைகளின் தாயான திருமதி வஜிரா பிரியங்கனி அவர்களிடம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 18) புதிய வீட்டின் சாவியை அடையாளமாக கையளித்தார்.

மகா சங்க உறுப்பினர்கள் ‘செத்பிரித்’ பாராயணங்களுடன், அன்றைய பிரதம அதிதியான மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் மற்றும் அனுசரனையாளர்கள், பயனாளியுடன் இணைந்து பதாகையை திரைநீக்கம் செய்த பின்னர், நாடாவை வெட்டி வீட்டை திறந்து வைத்ததுடன், மங்களகரமாக பால் பொங்கி வைத்ததுடன், இதே வேளையில் இராணுவத்தினரால் குடும்பத்தினருக்கு பல பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டன.

நன்கொடையாளர், திரு சஹான் ராஜபக்ஷ, மேற்கு பாதுகாப்பு படைத்தலைமையக பிரிகேடியர் பொதுப்பணி பிரிகேடியர் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி, 143 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் டிஎம்எப் கிட்சிலன் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ,, கலா ஓயா பயிற்சிப் பாடசாலையின் தளபதி எச்விஏ சோமவீர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ , 16 வது கஜபா படையணி மற்றும் முதலாவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரிகள், இரண்டாம் கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.