16th November 2022 16:45:04 Hours
கொஹுவளையில் அமைந்துள்ள 14 வது காலாட் படைபிரிவின் 142 வது காலாட் பிரிகேட் அவர்களின் பயிற்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒக்டோபர் 21 முதல் 27 ஆம் திகதி வரை ' விஷேட பிரமுகர் பாதுகாப்பு' பாடநெறியை முன்னெடுத்தது.
விஷேட பிரமுகர் பாதுகாப்பில் திறமையான நன்கு பயிற்சி பெற்ற பயிற்றுவிப்பாளர்களின் குழுவினால் நடத்தப்பட்ட பயிற்சியில் 12 படைவீரர்கள் பயிற்சி பெற்றனர். 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ரொஷான் ஜயமான்ன அவர்கள் பாடநெறியை நடத்துவதற்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினார். இது 142 காலாட் படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் மஹேன் சல்வத்துரவ அவர்களினால் கண்காணிக்கப்பட்டது.