08th October 2022 19:25:15 Hours
64 வது படைப்பிரிவின் 641 வது பிரிகேடின் 14 வது இலங்கை சிங்க படையணியின் படையினர் முதியவர்களுக்கு உதவும் நோக்கில், ஒட்டுசுட்டான் மண்டக்கண்டால் பகுதியில் வசிக்கும் முதியோர்களுக்கு 50 மதிய உணவுப் பொதிகளை செப்டம்பர் 25 திகதி அவர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கினர்.
641 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜனக் ஜயவர்தன அவர்கள் சிவில் சமூக ஒத்துழைப்புத் திட்டமாக இந்நிகழ்வை ஒழுங்கமைப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்கியதுடன் இந்த மனிதாபிமான நிகழ்ச்சி திட்டமானது 14 வது சிங்க படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எஸ்.ஐ பிரசன்ன அவர்களுனால் ஒருங்கிணைக்கப்பட்டது.