28th November 2023 09:28:54 Hours
லெபனானில் உள்ள ஐநா இடைக்காலப் படையின் 14 வது இலங்கைப் பாதுகாப்பு படை குழுவின் படையினருக்கு தகவல் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்துவதற்காக கணணி வடிவமைப்பு பாடநெறி அறிமுகப்படுத்தப்பட்டது.
குழு கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டிபீஐடி களுஅக்கல ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஐஜி அவர்களின் மேற்பார்வையில் 11 நவம்பர் 2023 அன்று வார இறுதிப் பாடமாக இந்த நிகழ்ச்சி தொடங்கியது. இது அவர்களின் கடமை நடைமுறைகளுக்கான நோக்கமாகும்.
இப் பாடநெறியின் தொடக்கவுரையை லெப்டினன் கேணல் டபிள்யூடிஎஸ் பெர்னாண்டோ யூஎஸ்பீ அவர்கள் ஆற்றினார், பல்வேறு தொழில்முறைக்கு அமைய குறிப்பாக ராஸ்டர் வடிவமைப்பு அடோப் பொட்டோசொப் வடிவமைப்பு பாடநெறி தொடர்பாக படையினருக்கு பயிற்சியளிக்கப்பட்டது.