Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th March 2022 19:01:17 Hours

121 வது பிரிகேடினால் உட்பத்தி செய்யப்பட்ட சேதன பசளை பகிர்ந்தளிப்பு

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 12 வது படைப்பிரிவின் 121 வது பிரிகேடினரால் உட்பத்தி செய்யப்பட்ட 60 தொன் சேதன பசளையை திங்கட்கிழமை (21) லக்போஹோர நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

கும்பக்கன மொனராகலையில் அமைந்துள்ள 121 வது பிரிகேடின் தலைமையகத்திற்கு 12 வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் லங்கா அமரபால அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஒரு தொகை பசளைகளை அரச முகவர் லக்போஹோர வரையரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் திரு எச்.எம் சமதா அவர்களிடம் கையளித்தார்.

121 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் டி.யு.என்.சேரசிங்க, , 3 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரி, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.